Tuesday, October 29, 2019

அத்திவரதருடன் ஒரு ஆனந்த அனுவபம் -5

 அத்திவரதருடன் ஒரு ஆனந்த அனுவபம் -5

அந்த நாளும்  ஆம் (ஜூலை 01 )வந்தது காலை  தொலைக்காட்சியை  ON  செய்தபோது நானும் என் மனைவியும் கண்ட காட்சி தற்சயலாக நிகழ்ந்ததா அல்லது தெய்வ அனுகூலமா  என தெரியலவில்லை .வைகுண்ட ஏகாதசி அன்று  சொர்க்கவாசல்  கதவு திறப்பதுபோல  இருத்தது எங்கள் இருவருக்கும்.அந்த கதவும் திறக்கும்  போது,  உண்மையிலே கன்னத்தில் போட்டுக்கொண்டோம் .பார்த்தவுடன் அவ்வளவு பரவசம், ஆனந்தம் .
 மேலும் வைகுண்டமே  தெரிவது போல இருந்தது .


முதல் நாள்  தரிசனம்
 

முதல் நாள்  தரிசனம்
 

முதல் நாள்  தரிசனம்

முதல் நாள்  கூட்டம் உள்ளூர் கூட்டம்  அலைமோதியது பின்னே  இருக்கதா ?   இலவச தரிசனம்  மற்றும்  50 ரூபாய் வரிசைகளில்  கூட்டம் இருந்ததாம் என் நண்பனிடம் கேட்டு  தெரிந்து கொண்டேன் .அவன் முதல் நாளே  பார்த்துவிட்டு  வந்தேன்  என்றான் ..என் அம்மாவிடம் இதை சொன்னேன் நம்ம எப்போ போவது எனகேட்டாங்க .அந்த  அத்திவரதர் தான் சொல்லவேண்டும் என்றேன் . அன்றைய  ஊடகங்களில்  தலைப்பு செய்தி அவர்தான் .அன்றே  50 ரூபாய் கட்டணத்தை ரத்து  செய்துவிட்டது  அரசு .அதற்கு பதிலாக  500 கட்டண வரிசை  தான் 500 பேருக்கு  அதும்  காலையில்  250 மாலையில்  250

தினம் தினம் இணையம் , தொலைக்காட்சி  என  அவர் தரிசனம் தான் . காலை ,மதியம்  மாலை  மற்றும் இரவு  என அவரை கண்குளிர தரிசனம் தான் .அப்புறம்  கூட்டம்  பற்றிய  தகவல்  ஒரு மணிக்கு  ஒரு முறை , அவர் அன்றும் அணிந்த பட்டாடைகள் , மாலை   மற்றும் அவரை தரிசித்த பிரமுகர்கள் என  அவர் செய்திதான்.

நாள் ஆக ஆக கூட்டம் கரை புரண்டு ஓடியது என  கூறுவதை விட  கரை தாண்டிதான்  ஓடியது .இதில் ஐந்து பேர் இறந்து விட்டார்கள் என தகவல் இந்த  கூட்டத்திற்குள்  எப்படி  போய்  பார்ப்பது என மனசு சஞ்சல படும் .எதை எல்லாம் யோசிக்கிறாய்  என மனசு சொல்லும் .இதற்கு இடையில் என் அத்தையும் மாமாவும் அத்திவரதரை தரிசனம் செய்துவிட்டு வந்தார்கள் .எங்கள் வாழ்நாளில் இப்படி ஒரு கூட்டத்தை பார்த்தது இல்லை என்றார்கள் .






எனக்கு  அவர் படங்கள் சில  கிடைத்தன . பார்க்க  பார்க்க பரவசம் தான் அத்தி மரத்தில் வடித்த சிலை  என்பதைவிட உயிர்  உள்ள கலை என்றே சொல்லலாம் வடித்தது  பிரம்மா அல்லவா ?

பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் 
அச்சுதா. அமர ரேறே.
 ஆயர்தம் கொழுந்தே. என்னும், 
இச்சுவை தவிர யான்போய்
 இந்திர லோக மாளும், 
அச்சுவை பெறினும் வேண்டேன்
 அரங்கமா நகரு ளானே


என்ற தொண்டரடி பொடி  ஆழ்வார் பாடிய பாசுரம் தன நினைவுக்கு வந்தது அந்த படங்களை .நீங்களும்  பாருங்கள்








ஒருநாள் எனக்கு  ஒரு  வீடியோ  வந்தது அதில்  1979  ல் எப்படி  அத்திவரதரை வெளியே எடுத்தார்கள் என காஞ்சிபுரத்தில்  உள்ள  ஒரு பட்டாச்சாரியார்  பேட்டி   வந்துஇருந்தது .நான்  மிரண்டு  போனேன்  அவர்  சொல்ல சொல்ல ஆர்வம் மேலிட்டது . அதில் அத்திவரதரை  வெளியே எடுக்கும் போது  நடந்த நிகழ்வுகளை சொல்லி இருந்தார் .நீங்களும் அந்த கண்ணொளியை பாருங்கள் .

https://www.youtube.com/watch?v=JQi6Q3rEvV0

அதுபோல்   இப்போது (2019) எடுக்கும்  போது  நடந்த நிகழ்வுகளை ஒரு பட்டாச்சாரியார் சொல்லி இருந்தார் .நீங்களும் அந்த கண்ணொளியை பாருங்கள் .

https://www.youtube.com/watch?v=CwHQRyBeV0I

இந்த  இரு  பட்டாச்சாரியார்களும் அப்பாவும் மகனும் ,உண்மையிலேயே  அந்த குடும்பம் வரதர் அருள் பெற்ற  குடும்பம் .இல்லை என்றால் இப்படி ஒரு வாய்ப்பு அந்த வரதர் கொடுத்து இருப்பாரா ?.மேலும் அவர் சந்ததிகளும் வரும் காலங்களிலும் இதே பணி தொடர வரதர் அருள் புரியட்டும் .

இதற்கு இடையில் நாங்களும் உறவினர் திருமணத்திற்கு குற்றாலம் போனோம் .அங்கும் இதே பேச்சுதான் .என்ன அருவில்தான் தண்ணீர் கொஞ்சம் கம்மி .இரண்டு அருவியில் தான்  தண்ணீர் வந்தது .அந்த  குற்றாலநாதரை  தரிசித்து விட்டு வந்தோம் 

ஐந்தருவி 

கோவிலில் நாங்கள் 

மெயின் அருவி
இதற்க்கிடையில்  ஒரு தகவல் ஆகஸ்ட் 01 முதல்  நின்ற  கோலம்  என அறிவிப்பு செய்ய பட்டு இருத்தது . மேலும் 300 ரூபாய் கட்டண  தரிசனம் .மாலை வேளைகளில் முதலில் 500 க்கு  அனுமதி அப்பறம்  2000 பேருக்கு இணைய (online) வழியாக பதிவு  செய்யலாம்  என அறிவிப்பு  வந்தது . 2000 பேரில் ஒரு 4 டிக்கெட் கிடைக்காதா என மனசு கேக்கும் .சரி  ஆகஸ்ட் 05ம் தேதி பார்க்கலாம்  என முடிவு செய்தோம் .அப்போது நின்ற கோலத்தில் காட்சி தருவார் கூட்டம் கம்மியா இருக்கும் என நினைத்து டிக்கெட் போட்டாச்சு .ஆனால் நாம் ஒன்று நினைக்க அவர்ஒன்று வைத்து இருந்தார்  . online வழியாக  ரெண்டுநாள் முன்னாடிதான்  முன்பதிவு  செய்யமுடியும் . அதனால்  அந்நாளுக்காக  காத்து இருந்தோம் . பயண ஏற்பாடுகளை ஆரம்பிதோம் .

(தொடரும் -5)




No comments: