அத்திவரதருடன் ஒரு ஆனந்த அனுவபம் -1
அத்திவரதருடன் அறிமுகம்
அத்திவரதருடன் அறிமுகம் எனது கல்லூரி பருவத்தில்(1999-2002) இருந்து துவக்கியது .காஞ்சிபுரத்தில் ஒரு புகழ் பெற்ற கல்லூரி படிக்கும் பொழுது எனது நண்பன் செந்தில் ( என் பெயரும் செந்தில்தான் ) மூலம் அறிமுகம் ஆனார் . நான் விடுதியில் தங்கி படித்தேன் . ஹாஸ்டல் சாப்பாடு நன்றாக இருக்கும் ஆனாலும் வெளி சாப்பாடு வேணும் போல இருக்கும் . ஒரு நாள் என் நண்பன் தக்காளி சாப்பாடு கொண்டுவந்தான் எங்களுக்கும் கொடுத்தான் ஆஹா அருமை ..அதனால் அவன் அம்மா( எனக்கும் அம்மா மாதிரி தான் ) தினதோரும் எனக்கும் சாப்பாடு கொடுத்து அனுப்புவார்கள். என்னை அவர்கள் வீட்டில் ஒருவனாக நினைத்தார்கள் இப்போவரை .
ஒருநாள் அவன் வீட்டுக்கு சென்றேன் அப்போ அவன் என்னை வரதராஜ பெருமாள் கோவிலுக்கு அழைத்து சென்றான் .கோவிலை சுத்தி காமிச்சிச்சான் .வியந்து போனேன் . முதல் முறை இந்த கோவிலிலுக்கு வந்தேனல்லவா . அந்த ஆச்சரியம் போவதற்குள் அடுத்த ஆச்சரியம் சொன்னான் . ஒரு குளத்தை காட்டி இதற்குள் சாமி இருக்கிறார் என்றான் . நான் என்ன சாமி என்றேன்? அதற்கு "அத்தி வரதர்"என்றான்.அப்போதுதான் அந்த பேரை கேக்குறேன் .அந்த குளத்தில் இருக்குற மண்டபத்தின் அடி யில் தண்ணீரில் இருக்கிறார் 40 வருடத்துக்கு ஒருமுறை அந்த குளத்து நீரை வெளியேத்தி விட்டு சாமியை எடுப்பார்கள் கொஞ்ச நாள் கழிச்சு மீண்டும் உள்ளே வச்சுருவாங்க னு சொன்னான் எனக்கு ஒரே ஆச்சிரியம்.. அப்போ வர சாமிக்கு ஏதும் ஆகாதனு கேட்டேன் . அதுக்கு சொன்னான் அது சாமி , சாமிக்கு ஏதும் ஆகாது னு சொன்னான் .
அத்திவரதருடன் அறிமுகம்
அத்திவரதருடன் அறிமுகம் எனது கல்லூரி பருவத்தில்(1999-2002) இருந்து துவக்கியது .காஞ்சிபுரத்தில் ஒரு புகழ் பெற்ற கல்லூரி படிக்கும் பொழுது எனது நண்பன் செந்தில் ( என் பெயரும் செந்தில்தான் ) மூலம் அறிமுகம் ஆனார் . நான் விடுதியில் தங்கி படித்தேன் . ஹாஸ்டல் சாப்பாடு நன்றாக இருக்கும் ஆனாலும் வெளி சாப்பாடு வேணும் போல இருக்கும் . ஒரு நாள் என் நண்பன் தக்காளி சாப்பாடு கொண்டுவந்தான் எங்களுக்கும் கொடுத்தான் ஆஹா அருமை ..அதனால் அவன் அம்மா( எனக்கும் அம்மா மாதிரி தான் ) தினதோரும் எனக்கும் சாப்பாடு கொடுத்து அனுப்புவார்கள். என்னை அவர்கள் வீட்டில் ஒருவனாக நினைத்தார்கள் இப்போவரை .
ஒருநாள் அவன் வீட்டுக்கு சென்றேன் அப்போ அவன் என்னை வரதராஜ பெருமாள் கோவிலுக்கு அழைத்து சென்றான் .கோவிலை சுத்தி காமிச்சிச்சான் .வியந்து போனேன் . முதல் முறை இந்த கோவிலிலுக்கு வந்தேனல்லவா . அந்த ஆச்சரியம் போவதற்குள் அடுத்த ஆச்சரியம் சொன்னான் . ஒரு குளத்தை காட்டி இதற்குள் சாமி இருக்கிறார் என்றான் . நான் என்ன சாமி என்றேன்? அதற்கு "அத்தி வரதர்"என்றான்.அப்போதுதான் அந்த பேரை கேக்குறேன் .அந்த குளத்தில் இருக்குற மண்டபத்தின் அடி யில் தண்ணீரில் இருக்கிறார் 40 வருடத்துக்கு ஒருமுறை அந்த குளத்து நீரை வெளியேத்தி விட்டு சாமியை எடுப்பார்கள் கொஞ்ச நாள் கழிச்சு மீண்டும் உள்ளே வச்சுருவாங்க னு சொன்னான் எனக்கு ஒரே ஆச்சிரியம்.. அப்போ வர சாமிக்கு ஏதும் ஆகாதனு கேட்டேன் . அதுக்கு சொன்னான் அது சாமி , சாமிக்கு ஏதும் ஆகாது னு சொன்னான் .
மேலும் அத்திவரதர் கதை, அத்திவரதர் அத்தி மரத்தால் ஆனவர் என்றான் எனக்கு ஆச்சரியம் அதிகம் ஆனது .எப்போ கடைசி யாக எடுத்தார்கள் என்றேன் 1979 என்றான் , நான் சொன்னேன் நீயும் நானும் அப்போ பிறக்கவில்லயே( நான் பிறந்தது 1982 என் நண்பன் பிறந்தது 1981) , அம்மா, அப்பா சொன்னாங்க அவர்களும் தினந்தோறும் சென்று தரிசித்தார்கள் என்றான் .அடுத்து 2019 தான் வெளியே எடுப்பார்கள் என்றான் .நான் சொன்னேன் அப்போ நாம எங்க இருப்போம் ணு தெரியல.பார்க்கலாம் என்கிறோம் இருவரும் .
(தொடரும் -1)


1 comment:
அத்திவரதரோடு ஆரம்பிச்சு இருக்கீங்க!
சில ஒற்றுகளை விட்டுருக்கீங்க. சில தட்டச்சுப்பிழைகளும் தவிர ....
இயல்பா எழுதி இருக்கீங்க....
தொடர்ந்து எழுதுங்கள் !
Post a Comment